அம்மா
காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக் கட்டிக் கொஞ்சும் அம்மா பாலும் சோறும் உண்ணத் தந்து படிக்கச் சொல்லும் அம்மா புழுதி போக்கி நீருமாட்டி பொட்டும் வைக்கும் அம்மா அழுதிடாமல் பள்ளிக்கூடம் அழைத்துச் செல்லும் அம்மா பள்ளிக்கூடம் விட்ட நேரம் பாதி வழிக்கு வந்து துள்ளிக் குதிக்கும் என்னைத் தூக்கித் தோளிற் போடும் அம்மா