Ottawa Tamil School
tamilSchoolImage
பள்ளிக் கூடம்
கொக்கும் நரியும் சிங்கமும் முயலும் வேடனும் புறாவும்
ஆமையும் முயலும் காகமும் தண்ணீரும் நண்பர்கள்
காகமும் வடையும் குரங்கும் பூனைகளும் பொன் முட்டை

பொன் முட்டை

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் நிறைய வாத்துக்கள் வளர்த்து வந்தான். அந்த வாத்துக்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டு வந்தது. அந்த விவசாயி அந்த தங்க முட்டைகளை விற்றுப் பணக்காரன் ஆனான்.

அவன் ஒரு பேராசை பிடித்தவன். வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டைதானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாகக் காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும். எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து விற்றால், ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான்.

அதனால் விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து இறந்து விட்டது. அதன் வயிற்றினுள் ஒரே ஒரு தங்க முட்டை மாத்திரம் இருந்தது. வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது. விவசாயி கவலைப்பட்டு வருந்தினான். இப்போது வருந்தி என்ன பிரயோசனம். இறந்த வாத்து இறந்தது தான்.

பேராசை பெரும் நட்டம்

இல்லம்
அறிவிப்புகள்
பள்ளி வாழ்த்துப் பாடல்
உசாத்துணை
உயர் கல்வி
கற்க தமிழ்
அரிச்சுவடி
குட்டிக் கதைகள்
குழந்தைப் பாடல்கள்
நீதி நெறிகள்
தாலாட்டு
School
Home
Announcements
Tamil Credit Course
Useful Links
2009/2010 கலண்டர்
முதல் நாள்: செப்.12, 2009
இறுதி நாள்: யூன் 19, 2010
ஆண்டு விழா: யூன் 12, 2010
விடுமுறை நாட்கள்
அக்டோபர் 10, 2009
அக்டோபர் 31, 2009
டிசம்பர் 26, 2009
சனவரி 2, 2010
செப்டம்பர் 13, 2010
மார்ச் 20, 2010
ஏப்ரல் 3, 2010
மே 22, 2010
இன்று
e-mail: info@ottawatamilschool.org           Ottawa, Canada          www.ottawatamilschool.org