|
|
||
|
|
ஆத்தி சூடி அறம் செய விரும்பு - நல்வாழ்வு நடத்த ஆசை கொள். ஆறுவது சினம் - தணிய வேண்டியது கோபம். இயல்வது கரவேல் - நம்மால் முடிந்ததை ஒளியாமல் செய்ய வேண்டும். ஈவது விலக்கேல் - பிறருக்குக் கொடுப்பதைத் தடுக்கக் கூடாது. உடையது விளம்பேல் - நம் திறமைகளை வெளியே சொல்லக் கூடாது. ஊக்கமது கைவிடேல் - ஒரு காரியம் செய்யும் போது தடை ஏற்படுமானால் அதைக் கண்டு மனம் தளரக் கூடாது. எண் எழுத்து இகழேல் - கணிதம் இலக்கியம் என்பவற்றை இகழ்ந்து பேசக் கூடாது. ஏற்பது இகழ்ச்சி - யாசிப்பது இழிவு தருவதாகும். ஐயம் இட்டு உண் - பிச்சை இட்டு பின் உண்ண வேண்டும். ஒப்புர வொழுகு - உலகத்தின் போக்கு எப்படி என்று உணர்ந்து அதன் படி நடக்க வேண்டும். ஓதுவது ஒழியேல் - படிப்பதை விடக் கூடாது. ஔவியம் பேசேல் - பொறாமை கொண்டு பேசக் கூடாது. அ·கம் சுருக்கேல் - தானிய விளைச்சலை குறைக்கக் கூடாது. - ஔவையார் |
|
| e-mail: info@ottawatamilschool.org Ottawa, Canada www.ottawatamilschool.org | ||